Return to BahaiPrayers.net
Facebook
அன்பான பிரபுவே! தாராளமும், இரக்கமுமுள்ள ஆண்டவரே! உமது வாசலில் பணிபுரியும் ஊழியர்கள் நாங்கள்; தெய்வீக ஒற்றுமை எனும் பாதுகாத்திடும் உமது நிழலின் கீழ் கூடியுள்ளோம். உமது கருணை சூரியன் அனைவரின் மீதும் பிரகாசிக்கின்றது; உமது அருட்கொடை மேகங்கள் அனைவரின் மீதும் பொழிகின்றன. உமது பரிசுகள் அனைவரையும் சூழ்ந்துள்ளன; உமது அன்பாதரவு அனைவருக்கும் ஆதரவை வழங்குகின்றது; உமது பாதுகாப்பு யாவற்றையும் அரவணைத்துள்ளது; உமது தயை எனும் பார்வை அனைவரின் மீதும் செலுத்தப்பட்டுள்ளது. பிரபுவே! உமது அளவில்லா அருட்கொடைகளை வழங்கிடுவீராக; உமது வழிகாட்டல் எனும் ஒளி பிரகாசித்திடச் செய்திடுவீராக. கண்கள் ஒளிர்ந்திடவும், நிலையான பேரின்பத்தால் இதயங்கள் மகிழ்ந்திடவும் செய்திடுவீராக. மக்கள் அனைவருக்கும் ஒரு புதிய ஆற்றலை வழங்கி, அவர்களுக்கு நித்திய வாழ்வைத் தந்தருள்வீராக. உண்மை புரிந்துணர்வு எனும் வாயில்களைத் திறந்து, நம்பிக்கை ஒளி பிரகாசித்திடச் செய்திடுவீராக. உமது அருட்கொடை எனும் நிழலின் கீழ் மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி, அவர்களை இணக்கமாக ஒன்றிணைத்திடுவீராக; அதனால், அவர்கள் ஒரே சூரியனின் ஒளிக்கதிர்களாகவும், ஒரே சமுத்திரத்தின் அலைகளாகவும், ஒரே மரத்தின் கனிகளாகவும் ஆகிடக்கூடும். அவர்கள் ஒரே ஊற்றிலிருந்து பருகிடக்கூடும்; ஒரே இளந்தென்றலினால் அவர்கள் புத்துயிரூட்டப்- படக்கூடும். ஒரே ஒளியின் தோற்றுவாயிலிருந்து அவர்கள் ஞானத்தைப் பெறக்கூடும். வழங்குபவரும், கருணைமிக்கவரும், சர்வ வல்லவரும் நீரே ஆவீர்.
- `Abdu'l-Bahá