Return to BahaiPrayers.net
Facebook
அன்பான பிரபுவே, நீர் மனிதர்கள் யாவரையும் ஒரே இனத்திலிருந்து ஆக்கியுள்ளீர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினராக வாழ விதித்துள்ளீர். உமது தெய்வீக முன்னிலையில் அவர்களெல்லாரும் உமது ஊழியர்களே. மனித இனம் முழுவதும் உமது கூடாரத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றது; உமது வள்ளன்மை என்னும் அருட்பீடத்தின் அருகில் அவர்கள் அனைவரும் ஒன்றுகூடியுள்ளனர்; அனைவருமே உமது அருட்கொடை என்னும் தீபத்தின் ஒளியினால் பிரகாசிக்கின்றனர்.
இறைவா! நீர் எல்லாரிடத்திலும் அன்பாயிருக்கின்றீர்; எல்லாரின் தேவையையும் பூர்த்தி செய்துள்ளீர்; யாவரையும் பாதுகாக்கின்றீர்; எல்லாருக்கும் வாழ்வளிக்கின்றீர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் திறமைகளையும் சக்திகளையும் வழங்கியுள்ளீர், அனைவரும் உமது கருணைக் கடலில் மூழ்கி இருக்கின்றனர்.
கருணைமிக்கப் பிரபுவே! யாவரையும் ஒன்று படுத்துவீராக. உமது சமயங்களிடையே இணக்கத்தை ஏற்படுத்தி, தேசங்களை ஒன்றாக்குவீராக; அதனால் அவை ஒவ்வொன்றும் மற்றொன்றை ஒரே குடும்பமாகவும், மண்ணுலகம் அனைத்தையுமே ஒரே இல்லமாகவும் காணக் கூடும். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பூரண இணக்கத்துடன் வாழ்ந்திடுவராக.
கடவுளே, மனித இன ஒருமையெனும் விருதுக் கொடியை நாட்டுவீராக; கடவுளே! அதி உயரிய சமாதானத்தை நிலை நாட்டுவீராக; கடவுளே! உள்ளங்களை ஒன்றிணைத்திடுவீராக; அன்புமிக்கத் தந்தையே! உமது அன்பு என்னும் நறுமணத்தினால் எங்கள் உள்ளங்களை மகிழ்வுறச் செய்வீராக. உமது வழிகாட்டுதல் என்னும் ஒளியால் எங்களின் கண்களைப் பிரகாசிக்கச் செய்வீராக.
உமது வசனங்களின் கீதத்தினால் எங்களின் செவிகளை இன்புறச் செய்து, உமது அருள் என்னும் கோட்டையினுள் எங்களைப் பாதுகாப்பீராக.
நீரே வல்லவரும் சக்திமிக்கவரும் ஆவீர்; பாவங்களை மன்னிப்பவரும் நீரே; மனித இனம் அனைத்தின் குறை பாடுகளைப் பொருட்-படுத்தாதவரும் நீரே.
- `Abdu'l-Bahá