Return to BahaiPrayers.net
Facebook
கடவுளே, மனிதர்களின் பிரகாசமிகு மெய்ம்மைகளின் மீது உமது பேரொளியினைப் பாய்ச்சி, அறிவு, வழிகாட்டுதல் என்னும் பிரகாசமான ஒளிகளை அவர்கள் மீது பொழியச் செய்து, அவர்களைப் படைப்புப் பொருள்கள் அனைத்திலிருந்தும் இவ் விழுமிய கிருபைக்காகத் தேர்ந்தெடுத்து, அனைத்துப் பொருள்களையும் அவர்களை ஆட்கொள்ளச் செய்து, அவற்றின் உள்ளார்ந்த சாராம்சத்தினைப் புரிந்து கொள்ளவும், அவற்றின் மர்மங்களை வெளிப்படுத்திடவும், அவற்றை இருளிலிருந்து கண்களுக்குப் புலனாகும் உலகிற்கு வெளிக்கொணரவும் செய்திட்டவரே! அவர், மெய்யாகவே, யாரை விரும்புகின்றாரோ அவருக்குத் தமது விசேஷ கருணையைக் காட்டுகின்றார்.
பிரபுவே, உமது நேசர்களை அறிவு, அறிவியல்கள், கலைகள் ஆகியவற்றினைப் பெற்றிடவும் அவர்கள் படைப்பினங்கள் அனைத்தின் உள்ளார்ந்த மெய்ம்மையினில் பொக்கிஷமாக்கப்பட்டுள்ள இரகசியங்களைப் புரிந்து கொள்ளவும் உதவி புரிவீராக. இருப்பனவற்றின் உள்ளார்ந்த பகுதியில் எழுதிப் பதிக்கப்பட்டுள்ள மறைவான உண்மைகளைச் செவிமடுக்கவும், செய்வீராக. படைப்பினங்கள் அனைத்தின் மத்தியில் அவர்களை வழிகாட்டுதலின் சின்னங்களாகவும், இந்த “முதல் வாழ்வில்” ஒளியினைப் பொழிந்திடும், மனதின் ஊடுருவும் கதிர்களாகவும், அவர்களை ஆக்கிடுவீராக. அவர்களை உந்தன்பால் வழி நடத்துபவர்களாகவும், உமது பாதையில் உமது இராஜ்யத்தின்பால் மனிதர்களை விரைந்திட ஊக்குவித்திடும் தூதுவர்களாகவும் ஆக்கிடுவீராக.
மெய்யாகவே, நீரே, சக்தி மிக்கவர், பாதுகாப்பவர், ஆற்றல் மிக்கவர். ஆதரிப்பவர், வலிமை மிக்கவர், தாராள குணம் மிகுந்தவர்.
- `Abdu'l-Bahá