Return to BahaiPrayers.net
Facebook
என் பிரபுவே, உந்தன்பால் தன் வதனத்தைத் திருப்பியுள்ளவனும், உந்தன் கிருபை எனும் அற்புதங்கள் மீதும், உந்தன் அருட்கொடை எனும் வெளிப்பாடுகள் மீதும், தனது நம்பிக்கையை வைத்துள்ளவனும் நானே. உந்தன் கருணை எனும் கதவின் முன்னிருந்து என்னை ஏமாற்றத்தோடு திரும்பிவிடச் செய்திடாதீர் என்றும், உந்தன் சமயத்தை மறுத்திட்ட உந்தன் உயிரினங்களிடம் என்னைக் கைவிட்டு விடாதீர் என்றும் நான் உம்மிடம் பிரார்த்திக்கின்றேன்.
என் கடவுளே, நான் உந்தன் ஊழியனும், உந்தன் ஊழியனின் மைந்தனுமாவேன். உந்தன் நாள்களில் நான் உந்தன் உண்மையை ஒப்புக்கொண்டும், உந்தன் ஒருமை எனும் கரைகளை நோக்கி என் அடிச்சுவடுகளைத் திருப்பியுள்ளேன். உந்தன் தனித்தன்மையை ஒப்புக்கொண்டு, உந்தன் ஒற்றுமையை ஏற்றுக்கொண்டு, உந்தன் மன்னிப்பையும் பொறுத்தருள்தலையும் நம்பி இருக்கின்றேன். நீர் விரும்பியவாறு செய்வதற்குச் சக்தி படைத்தவராவீர். சர்வ ஒளிமயமானவரும், என்றும் மன்னித்தருள்பவருமான கடவுள் உம்மைத் தவிர வேறிலர்.
- Bahá'u'lláh