Return to BahaiPrayers.net
Facebook
என் பிரபுவே, உம்மைத் தவிர மற்றனைத்திலிருந்தும் பற்றறுத்து, உமது அருட்கொடை எனும் சொர்க்கத்தையும், உமது தயை எனும் சமுத்திரத்தையும் நோக்கி, என் வதனத்தைத் திருப்பியுள்ளதை நீர் காண்கின்றீர். சைனாயின் மீது உமது திருவெளிப்பாடெனும் பகலவனின் பேரொளிகளினாலும், என்றும் மன்னிப்பவர் எனும் உமது திருநாமம் எனும் தொடுவானத்தின் மீதிருந்து ஒளிவீசிடும் உமது கிருபை எனும் ஒளிக்கோலத்தின் சுடரொளிகளின் பெயராலும்், என்னை மன்னித்தருளி, என் மீது இரக்கம் காட்டிடவேண்டும் என, நான் உம்மைக் கேட்டுக்கொள்கிறேன். எனவே, ஒளி எனும் உமது எழுதுகோலைக் கொண்டு, உமது திருநாமத்தின் வாயிலாகப் படைப்புலகில் என்னை மேன்மைப்படுத்தக் கூடியவற்றை எனக்காக எழுதிடுவீராக. என் பிரபுவே, உந்தன்பால் என்னைத் திரும்பிடவும், உமது அன்புக்குரியவர்களின் குரலை நான் செவிமடுத்திடவும் செய்வீராக. உலகின் சக்திகள் அவர்களைப் பலமிழக்கச் செய்வதில் தோல்வியுறவும், நாடுகளின் அரசாட்சி அவர்களை உம்மிடமிருந்து தடுப்பதில் சக்தியற்றும் போகச்செய்து எனக்கு உதவிடுவீராக; மேலும், உம்மை நோக்கி முன்னேறிச் சென்ற அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்: “விண்ணிலுள்ள அனைத்திற்கும், மண்ணிலுள்ள அனைத்திற்கும் பிரபுவாகிய, எங்கள் பிரபுவே இறைவன் ஆவார்.”
- Bahá'u'lláh