Return to BahaiPrayers.net
Facebook
கடவுளே, ஒளி உமக்கே உரியதாகுக. மனுக்குலம் அனைத்தின் போற்றுதலுக்கப்பால் நீர் பரிசுத்தமாக உயர்ந்திருக்கும்போது, உம்மைப்் பற்றி நான் எவ்வாறு குறிப்பிட இயலும். கடவுளே, உமது நாமம் போற்றப்படுமாக; நீரே அரசரும், நித்திய உண்மையும் ஆவீர்; விண்ணுலகங்களிலும் மண்ணிலும் உள்ளவை யாவை என்பதை நீர் அறிவீர்; உம்மிடமே யாவும் திரும்பிடுவது கட்டாயம். தெய்வீகமாக விதித்தருளப்பட்ட உமது திருவெளிப்பாட்டை ஒரு தெளிவான அளவுக்-கேற்றவாறு நீர் கீழே அனுப்பியுள்ளீர். பிரபுவே, நீர் போற்றப்படுவீராக. விண்ணிலும் மண்ணிலும், அவற்றுக்கு இடையேயும் உள்ள வான்படைகளைக் கொண்டு, நீர் விரும்பிய எவர் ஒருவரையும் நீர் வெற்றிப்பெறச் செய்கின்றீர். நீரே இறையாண்மையுடையவர், நித்திய உண்மை-யானவர், வென்றிடவியலா வல்லமையின் பிரபு.
பிரபுவே, நீர் போற்றப்படுவீராக. உமது மன்னிப்புக்காக மன்றாடிடும் உமது ஊழியர்களின் பாவங்களை, நீர் எந்நேரமும் மன்னித்தருள்கின்றீர். என் பாவங்களையும் வைகறையில் உமது மன்னிப்பை நாடுவோரின் பாவங்களையும் கழுவுவதோடு, பகல் வேளைகளிலும், இரவு காலங்களிலும் உம்மைப் பிரார்த்திப்போரின் பாவங்களையும், வேறெவரையும் அல்லாது கடவுளை மட்டுமே ஆவல்கொள்வோரின் பாவங்களையும், இறைவன் அவர்களுக்கென வழங்கியுள்ள எதுவானாலும் அதனை அர்ப்பணித்தோரின் பாவங்களையும், காலையும் மாலை வேளையும் உமது புகழைப் பாடிடுவோரின் பாவங்களையும், தங்களுக்கான கடமைகளில் தவறாதோரின் பாவங்களையும் மன்னித்தருள்வீராக.
- The Báb