Return to BahaiPrayers.net
Facebook
கலப்பற்ற மகிழ்வுடன் ஒன்றுகூடுங்கள்; பின்னர் கூட்டத்தின் ஆரம்பத்தில், தூய்மையுடன் இப்பிரார்த்தனையைக் கூறுங்கள்.
இராஜ்யத்தின் அதிபதியே! எங்களின் உடல்கள் இங்கு ஒன்றுகூடியிருந்த போதும், மெய்மறந்த எங்கள் இதயங்கள் உமது அன்பினால் கிளர்ச்சியுற்று, நாங்கள், உமது பிரகாசமிகு வதனத்தின் ஒளிக்கதிர்களினால் பரவசமடைந்துள்ளோம். நாங்கள் பலவீனர்களாயினும் உமது வல்லமை, சக்தி ஆகியவற்றின் வெளிப்பாடுகளுக்காகக் காத்திருகின்றோம். நாங்கள் பொருள்களோ, வழிவகைகளோ அற்ற வறியவர்களாயினும், உமது இராஜ்யத்தின் பொக்கிஷங்களிலிருந்து செல்வங்களை எடுத்துக் கொள்கிறோம். நாங்கள் துளிகளேயாயினும், உமது சமுத்திரத்தின் ஆழங்களிலிருந்து நீரை எடுத்துக் கொள்கிறோம். தூசுகளேயாயினும், நாங்கள் உமது சுடரொளி வீசிடும் கதிரவனின் மகிமையில் பிரகாசிக்கின்றோம்.
எங்களின் போஷகரே! உமது உதவியினை அனுப்பிடுவீராக, அதன்வழி இங்குக் கூடியிருக்கும் ஒவ்வொருவரும் ஓர் எரியும் மெழுகுவத்தியாகவும், ஈர்ப்பின் மையமாகவும், உமது தெய்வீக இராஜ்யங்களின்பால் அழைப்பவர்களுமாக ஆகி, இறுதியில் இக்கீழுலகினை உமது சுவர்க்கத்தின் பிரதிபலிப்பாக ஆக்கிடக் கூடும்.
- `Abdu'l-Bahá