Return to BahaiPrayers.net
Facebook
ஆன்மீகச் சபைக் கூட்டத்தின் முடிவில் கூறவேண்டிய பிரார்த்தனை
கடவுளே, கடவுளே! உம்மிலும் உமது அடையாளங்களிலும் நம்பிக்கை வைத்து, உமது ஒப்பந்தத்திலும் இறுதி சாஸனத்திலும் உறுதியடைந்து, உந்தன்பால் கவரப்பட்டு, உமது அன்பெனும் நெருப்பினால் பிரகாசமடைந்து, உமது சமயத்தில் உண்மையுள்ளவர்களாகவும் இவ்வான்மீகச் சபையில் கூடியிருக்கும் எங்களை, நீர், கண்களுக்குப் புலனாகாத உமது ஒருமைத் தன்மை என்னும் இராஜ்யத்திலிருந்து பார்க்கின்றீர். நாங்கள் உமது திராட்சைத் தோட்டத்தின் ஊழியர்கள், உமது சமயத்தைப் பரப்புபவர்கள், உமது திருமுகத்தைப் பக்தியுடன் வணங்குபவர்கள், உமது அன்பர்கள்முன் பணிவானவர்கள், உமது வாயிலின் முன் தாழ்மையானவர்கள். உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைச் சேவையில் உறுதிப்படுத்துமாறும், பார்க்கவியலா உமது படைகளைக் கொண்டு எங்களுக்கு ஆதரவளிக்குமாறும், உமது சேவையில் எங்களின் இடைகளை வலுப்பெறச் செய்யுமாறும் மன்றாடுகின்றோம்; அதனால் நாங்கள் உமக்குக் கீழ்ப்படிந்து, பூஜித்து, உம்முடன் உரையாடும் குடிகளாக ஆகக்கூடும்.
எங்கள் பிரபுவே! நாங்கள் வலுவற்றவர்கள்; நீரே வல்லவர், சக்தி மிக்கவர். நாங்கள் உயிரற்றவர்கள், நீர் உயிரளிக்கும் பரமாத்மா. நாங்கள் வறியவர்கள், நீரே பராமரிப்பவர், சக்தி வாய்ந்தவர்.
எங்கள் பிரபுவே! எங்கள் முகங்களை உமது கருணைமிகு வதனத்தின்பால் திரும்பச் செய்வீராக; உமது தெய்வீகப் பீடத்திலிருந்து உமது அபரிமிதமான அருளைக் கொண்டு உணவூட்டுவீராக; உமது அதிமேலான தெய்வ கணங்களைக் கொண்டு எங்களுக்கு உதவி புரிந்து அப்ஹா இராஜ்யத்திலுள்ள உமது தூய ஆன்மாக்கள் மூலமாக எங்களை உறுதிப்படுத்துவீராக.
மெய்யாகவே, நீரே தாராள குணமுடையவர், கருணை மிக்கவர். நீரே பெரும் வள்ளன்மையுடையவர், மெய்யாகவே, நீரே இரங்குபவர், அருள் மிகுந்தவர்.
- `Abdu'l-Bahá