Return to BahaiPrayers.net   Facebook

என் கடவுளே, உமது வல்லமைமிக்க அடையாளம் மூலமாகவும், மனிதர்கள் மத்தியில் உமது அருளின் வெளிப்பாடு மூலமாகவும், உமது முன்னிலை எனும் நகரின் வாசலிலிருந்து என்னைத் துரத்திவிடாதீர் என்றும், உமது உயிரினங்கள் மத்தியில் உமது அருளின் வெளிப்பாடுகள் மீது நான் வைத்துள்ள நம்பிக்கைகளைக் குலைத்துவிடாதீர் என்றும், நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன் திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, உமது கதவின் வாயிற்படியின் அண்மைக்கு மேன்மேலும் நெருக்கமாக என்னை ஈர்த்திடவும், உமது கருணை எனும் நிழலிலிருந்தும், உமது அருட்கொடை எனும் விதானத்திலிருந்தும், என்னை வெகுதூரம் விலக்கிடாதிருக்கவும் உமது இனிய குரல் மூலமாகவும், உமது மேன்மைமிகு திருவாக்கு மூலமாகவும், நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன் திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, உமது சுடரொளி வீசும் நெற்றியின் பிரகாசம் மூலமாகவும், அதி உயரிய தொடுவானத்தின் மீதிருந்து ஒளி வீசும் உமது திருவதன ஒளியின் பிரகாசம் மூலமாகவும், உமது ஆடையின் நறுமணத்தைக் கொண்டு என்னை ஈர்த்திடுமாறும், உமது திருவாய்மொழி எனும் நனிசிறந்த மதுரசத்தை என்னைப் பருகிடவும் செய்திடுவீராக.

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன் திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள னைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

உமது படைப்பெனும் இராஜ்யத்தின் மீது மறைவான அர்த்தங்கள் எனும் கஸ்தூரி மணத்தைப் பொழிந்து, உமது நிருபங்களின் பக்கங்கள் மீது நகர்ந்திடும் உமது அதி மேலான எழுதுகோலைப் போன்று, உமது வதனத்தின் மீது நகர்ந்திடும் உமது கேசம் மூலமாக, உமது சமயத்திற்காகச் சேவையாற்றி, அதனால் நான் பின்தங்கி விடாமலும், உமது அடையாளங்கள் மீது ஆட்சேபம் செய்திட்ட, உமது வதனத்திலிருந்து விலகிச் சென்றோரின் கருத்துகளினால் தடுத்திடா-திருக்குமாறும் என்னை உயர்த்திடுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன் திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, நாமங்களுக்கெல்லாம் அரசனாக நீர் ஆக்கியுள்ள எந்தத் திருநாமத்தினால், விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைவரும் பரவசம் அடைந்துள்ளனரோ; அத்திருநாமத்தினால் உமது திருவழகு எனும் பகல் நட்சத்திரத்தைக் கண்ணுற என்னை இயலச் செய்தும், உமது திருவாய்மொழி எனும் மதுரசத்தை எனக்கு வழங்கிடவும், நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன் திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, அதிவுயரிய சிகரங்கள் மீதுள்ள உமது மாட்சிமை என்னும் திருக்கூடாரம் மூலமாகவும், அதிவுயரிய மலைகள் மீதுள்ள உமது திருவெளிப்பாடெனும் விதானத்தின் மூலமாகவும், உமது திருவிருப்பம் விரும்பியுள்ளதையும், உமது நோக்கம் வெளிப்படுத்தியுள்ளதையும் செயல்-படுத்துவதற்கு, எனக்கு அருள்கூர்ந்து உதவிடுமாறு நான் உம்மிடம் மன்றாடுகின்றேன்.

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன் திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, தன்னை வெளிப்படுத்திய அத்தருணமே, அழகெனும் இராஜ்யமே பக்திபரவசத்தால் தலைவணங்கி, அவ்வழகை ரீங்காரமிடும் குரலில் மகிமைப்படுத்திய, நித்தியம் எனும் தொடுவானத்தின் மீது பிரகாசிக்கும் உமது திருவழகின் பேரில், நான் உடைமையாகக் கொண்டிருக்கும் அனைத்திலும் மரித்து, உமக்குரிய அனைத்திற்காகவும் வாழ்ந்திட எனக்கு அருளுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன் திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, எந்த நாமத்தின் மூலமாக உமது அன்பர்களின் உள்ளங்கள் ஆட்கொள்ளப்படவும், உலகில் வாழும் அனைவரின் ஆன்மாக்களும் விண்ணில் உயரப் பரந்திடவும் செய்யப்பட்டனவோ, நல்லன்பர் எனும் உமது அந்தத் திருநாமத்தின் வெளிப்பாடு மூலமாக, உமது உயிரினங்களுக்கிடையே உம்மை நினைவு- கூர்ந்திடவும், உமது மக்களிடையே உம்மைப் புகழ்ந்திடவும் எனக்கு உதவிடுமாறு நான் உம்மிடம் மன்றாடுகின்றேன்.

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன் திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, தெய்வீக விருட்சத்தின் சலசலப்பு மூலமாகவும், உமது திருநாமங்கள் எனும் இராஜ்யத்தில் உமது திருவாய்மொழி தென்றல்களின் முணுமுணுப்பு மூலமாகவும், உமது விருப்பம் வெறுத்திடும் எதனிலிருந்தும் என்னை வெகுதூரம், விலகச் செய்து, உமது அடையாளங்களின் பகல் நட்சத்திரமானவர் மிளிர்ந்திட்ட அந்த ஸ்தானத்திற்கு என்னை உயர்த்திடுமாறு நான் உம்மிடம் மன்றாடுகின்றேன்.

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன் திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, உமது விருப்பம் எனும் திருவாயிலிருந்து வெளிவந்த அத்தருணமே, சமுத்திரங்கள் பொங்கி எழந்திடவும், காற்று வீசிடவும், நற்கனிகள் வெளிப்படவும், மரங்கள் துளிர்த்து வெளிப்படவும், கடந்தகாலத் தடயங்கள் அனைத்தும் மறைந்திடவும், திரைகள் அனைத்தும் இரண்டாகக் கிழிந்திடவும் செய்திட்ட, உம்மீது பக்திகொண்டோரைக், கட்டுப்படுத்த வியலாதவர் எனும் அவர்களின் பிரபுவின் திருவதனத்தின் ஒளியை நோக்கி விரைந்திடச் செய்த, அந்த அட்சரத்தின் மூலமாக, உமது அறிவெனும் கருவூலங்களுள் ஒளிந்து கிடப்பவற்றையும், உமது விவேகமெனும் களஞ்சியங்களுள் மறைந்துள்ளவற்றையும் எனக்குத் தெரிவித்திடு-மாறு நான் உம்மிடம் மன்றாடுகின்றேன்.

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன் திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டோர், உமது அன்புக்குரியோர் ஆகியோரின் கண்களிலிருந்து நித்திரையைத் துரத்திவிட்ட உமது அன்பெனும் தீயின் மூலமாகவும், அதிகாலை வேளையில் அவர்கள் உம்மை நினைவுகூர்தல், வாழ்த்துதல் ஆகிவற்றின் மூலமாகவும், உமது திருநூலில் நீர் அனுப்பிவைத்தும், உமது திருவிருப்பத்தின் மூலமாக நீர் வெளிப்படுத்தி-யுள்ளவற்றை அடைந்துள்ளவர்களுள் என்னையும் ஒருவனாகக் கணக்கிடுமாறு, நான் உம்மிடம் மன்றாடுகின்றேன்.

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன் திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, உந்தன்பால் ஈர்க்கப்பட்டோர் உமது ஆணை எனும் கணைகளைச் சந்திக்க அவர்களைத் தூண்டியும், உம் மீது பக்தி கொண்டோரை உமது பாதையில் நீர் எதிரிகளின் வாள்களைச் சந்திக்கச் செய்திட்ட உமது வதனத்தின் ஒளி மூலமாக, உமது அதிமேன்மையான எழுதுகோலைக் கொண்டு, உமது நம்பிக்கைக்குரியோருக்கும், உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கும் நீர் எழுதியுள்ள-வற்றை எனக்கும் எழுதிடுமாறு நான் உம்மிடம் மன்றாடுகின்றேன்.

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன் திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, எதன் மூலமாக நீர் உமது அன்பர்கள் குரலுக்கும், உமக்காக ஏங்குவோர் பெருமூச்சுக்கும், உமது அண்மையை அனுபவிப்போர் அழுகுரலுக்கும், உம்மீது பக்தி கொண்டோர் புலம்பலுக்கும், செவிசாய்த்துள்ளீரோ, உமது அந்தத் திருநாமத்தின் மூலமாகவும், நிறைவேற்றி; எதன் மூலமாகத் தங்கள் நம்பிக்கைகளை உம்மீது வைத்தோரின் விருப்பங்களை நீர் நிறைவேற்றி, உமது கிருபை, தயை ஆகியவற்றின் வாயிலாக அவர்களின் ஆசைகளை பூர்த்தி செய்தீரோ அந்தத் திருநாமத்தின் பேராலும்; எதன் மூலமாக மன்னிப்பு எனும் சமுத்திரம் உமது வதனத்தின் முன் பொங்கி எழுந்ததோ, மற்றும் உமது வள்ளன்மை எனும் மேகங்கள் உமது ஊழியர்களின் மீது பொழிந்தனவோ, உமது அந்தத் திருநாமத்தின் பேரில், உம்பால் திரும்பியும், உம்மால் விதிக்கப்படுள்ள நோன்பைக் கடைப்பிடித்துமுள்ள ஒவ்வொருவருக்கும், உமது உத்தரவின்றிப் பேசாதிருப்பதும், உமது பாதையிலும், உமது அன்பிலும், அவர்கள் உடைமையாகக் கொண்டிருந்த அனைத்தையும் துறந்திடுவது எனும் சன்மானத்தை வழங்கிடுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.

என் கடவுளே, உம் மூலமாகவும், உமது அடையாளங்கள் மூலமாகவும், உமது தெளிவான சின்னங்கள் மூலமாகவும், உமது அழகு, உமது கிளைகள் ஆகியவற்றின் பகல் நட்சத்திரத்தின் பிரகாசிக்கும் ஒளி மூலமாகவும், உமது சட்டங்களை உறுதியாகப் பற்றிக்கொண்டும், உமது திருநூலில் அவர்களுக்கு நீர் ஆணையிட்டுள்ளவற்றைக் கடைப்பிடித்தோரின் தீயச் செயல்களை இரத்துச்செய்யுமாறும் நான் உம்மிடம் மன்றாடுகின்றேன்.

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன் திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

 


English  
ភាសាខ្មែរ  
አማርኛ.  
Afrikaans  
Alaska Native  
American Indian  
Azərbaycan  
Bahasa Indonesia  
Bahasa Malaysia  
Bidayuh  
Bosanski  
Canadian Indigenous  
Català  
Cebuano  
Česky  
Chamorro  
Chichewa  
Corsica  
Cymraeg  
Daga  
Dansk  
Deutsch  
Dzongkha  
Eesti  
Español  
Esperanto  
Euskara  
Fiji  
Filipino  
Føroyar  
Français  
Frysk  
Hausa  
Hawaiian  
Hiri Motu  
Hrvatski  
Irish  
Íslenska  
Italiano  
Kabyle  
Kalaallisut  
Kiribati  
Kiswahili  
Kreyol Ayisyen  
Kuanua  
Kube  
Latviešu  
Lëtzebuergesch  
Lietuvių  
Luganda  
Magyar  
Malagasy  
Malti  
Māori  
Marshallese  
Melpa  
Montenegrin  
Nalik  
Namibia  
Nederlands  
Norsk  
Papiamentu  
Polski  
Português (BR)  
România  
Sámi  
Samoan  
Sarawak  
Sesotho  
Shqip  
Slovenščina  
Slovensky  
Sranan Tongo  
Srpski српски  
Suomi  
Svenska  
Tetum  
Tiếng Việt  
Tok Pisin  
Tongan  
Türkçe  
Türkmençe  
Tuvalu  
Vanuatu  
ελληνικά  
Беларускі  
български  
Кыргыз  
Монгол хэл  
Русский  
Тоҷикӣ  
Україна  
հայերեն  
اُردُو  
العربية  
فارسی  
नेपाली  
मराठी  
हिंदी  
বাংলা  
ગુજરાતી  
ଓଡ଼ିଆ  
தமிழ்  
తెలుగు  
ಕನ್ನಡ  
മലയാളം  
ภาษาไทย  
ພາສາລາວ  
한국어  
日本語  
简体中文  
繁體中文  
Windows / Mac