Return to BahaiPrayers.net
Facebook
என் பிரபுவாகிய இறைவா, புகழனைத்தும் உமக்கே உரியதாகட்டுமாக! உமது ஆணைக்கேற்ப நாங்கள் உண்ணா நோன்பைக் கடைப்பிடித்துள்ளோம்; உமது அன்பு, உமது நல்விருப்பம் ஆகியவற்றின் வழி அதை இப்பொழுது முடிக்கின்றோம். என் இறைவா, உம்மைத் தவிர மற்றெல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு, உமது சமயத்தின்பால் எங்கள் முகங்களைப் பதித்தவர்களாக உமது அழகின் பொருட்டு உமது பாதையில் முழுமையாக நாங்கள் ஆற்றியுள்ள செயல்களை அருள்கூர்ந்து ஏற்றுக்கொள்வீராக. அதற்குப் பிரதிபலனாக எங்கள் மூதாதையர் மீதும், இவ்வதி உயரிய, அதி மகிமை வாய்ந்த வெளிப்பாட்டில் உந்தனிலும், உமது வலிமைமிகு அடையாளங்களிலும் நம்பிக்கை வைத்துள்ள அனைவர் மீதும் உமது மன்னிப்பை வழங்குவீராக. நீர் தேர்ந்தெடுத்ததைச் செய்வதற்கு நீர் ஆற்றல் மிக்கவராய் இருக்கின்றீர். மெய்யாகவே, நீரே, அதி மேன்மை மிக்கவர், எல்லாம் வல்லவர், கட்டுப்படுத்தப்படாதவர்.
- Bahá'u'lláh