Return to BahaiPrayers.net
Facebook
இறைவா, என் இறைவா, புகழுக்குரியவர் நீரே. எவ்வாறு கட்டாயப் பிரார்த்தனையை உமது ஒருமைத்தன்மையை ஏற்றுக்கொண்டவர்கள் உயர்வதற்கான ஏணியாக ஆக்கியுள்ளீரோ, அவ்வாறே உம்மால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களையும், உமது அன்புக்குரியவர்களையும், உமது ஊழியர்களையும், உமது இராஜ்யத்தின் மக்களுக்கு ஓர் ஒளியாக ஆக்கியுள்ள உண்ணா நோன்பினைக் கடைப்பிடிக்குமாறு நீர் கட்டளையிட்டுள்ள அந் நாள்கள் இவையே ஆகும். என் இறைவா, மனுக்குல முழுமைக்குமாக நீர் விதித்துள்ள மகிமை, நற்பெருமை ஆகிய இவ்விரு வலிமைமிகு தூண்களின் வழி, இறைப்பற்றற்றோரின் தீமைகளிலிருந்தும், விஷமம் புரிந்திடுவோர் ஒவ்வொருவரின் சதிச் செயல்களிலிருந்தும், உமது சமயத்தைப் பாதுகாத்தருளுமாறு உம்மை இறைஞ்சி வேண்டிக் கொள்கிறேன். இறைவா, உமது சக்தி, உமது வல்லமை ஆகியவற்றின் வழி நீர் வெளிப்படுத்தியுள்ள அவ்வொளியினை மறைத்து விடாதீர். உமது கட்டளை, அரசுரிமை ஆகியவற்றின்வழி கண்ணுக்குப் புலப்படுவதும் கண்ணுக்குப் புலப்படாததுமான விண்ணவர் படையினரைக் கொண்டு உம்மில் உண்மையான நம்பிக்கையைக் கொண்டோருக்கு உதவிடுவீராக. எல்லாம் வல்லவரும், அதி சக்தி மிக்கவருமான இறைவன் உம்மையன்றி வேறிலர்.
- Bahá'u'lláh