Return to BahaiPrayers.net   Facebook

பிரபுவே, என் இறைவா, நீர் அதி மேன்மைக்கு உரியவராவீராக! உமது அன்பிற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் உண்ணா நோன்பைக் கடைப்பிடிக்குமாறு நீர் பணித்துள்ளோர், உமது சட்டத்தின்பால் தங்களின் விசுவாசத்தை மெய்ப்பித்து உமது வாசகங்களையும் விதிகளையும் பின்பற்றுவோர், உமது அண்மையை அடைந்து, உமது வதனத்தைக் கண்ணுற்று, அதே வேளையில் அவர்களின் உண்ணா நோன்பையும் முடித்துள்ளோர் ஆகியவர்கள் சாட்சியாக உம்மை வேண்டிக் கொள்கின்றேன். உமது மகிமை சாட்சியாக! அவர்கள் உமது நல்விருப்பம் எனும் அவையின்பால் திரும்பியுள்ளதால், அவர்களின் வாழ்நாள் அனைத்துமே உண்ணா நோன்புக்குரிய நாள்களாகும். உமது விருப்பம் எனும் திருவாய், “மனிதர்களே, எமது அழகின் நிமித்தம் நோன்பைக் கடைப்பிடிப்பதுடன், அதற்குக் கால வரம்பு எதுவும் நியமிக்காதீர்,” என அவர்களிடம் நீர் கூறுமிடத்து, உமது மகிமை என்னும் மாட்சிமை சாட்சியாக, அவர்கள் ஒவ்வொருவரும் அதை விசுவாசத்துடன் கடைப்பிடித்து, எது உமது சட்டத்தை மீறுகின்றதோ அதில் ஈடுபடாது, உமக்காக அவர்கள் தங்கள் ஆன்மாக்களையே துறக்கும் வரை அவ்வாறே செய்து வருவர்; ஏனெனில் அவர்கள் உமது அழைப்பின் இனிமையைச் சுவைத்துள்ளது மட்டுமன்றி, உமது நினைவு, புகழ்ச்சி, ஆகியவற்றுடன் உமது ஆணை என்னும் உதடுகளிலிருந்து பிறந்த வார்த்தைகளினாலும் மதி மயக்கம் அடைந்துள்ளனர்.

மேன்மைமிக்கவரும், அதி உயர்வானவருமாகிய உமது தன்னகத்தினாலும் பிந்திய கால அவதாரமான எவரின் மூலம் நாமங்களின் இராஜ்யமும், பண்புகளின் ஆதிக்கமும் அதிரச் செய்யப்பட்டனவோ, பூவுலக, சுவர்க்கலோக மக்கள் பேரின்ப மயக்கம் உற்றனரோ, வெளிப்பாடு, படைப்புலகம் ஆகிய இராஜ்யங்களில் வசிப்போர் உமது நல்விருப்பத்திற்கு முரணானவற்றிலிருந்து உண்ணா நோன்பிருந்து, உம்மைத் தவிர மற்றவற்றின்பால் திரும்புவதிலிருந்து தங்களைத் தடுத்துக் கொண்டவர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் நடுங்கினரோ, அந்த அவதாரத்தின் வாயிலாகவும், எங்களையும் அவர்களோடு ஒன்று சேர்த்து, அவர்களுடைய பெயர்களை எந்த நிருபத்தில் எழுதியுள்ளீரோ அதே நிருபத்தில் எங்கள் பெயர்களையும் எழுதிடுமாறு மன்றாடுகின்றேன். இறைவா, உமது வல்லமையின் அற்புதங்களாலும், உமது அரசாட்சி, மகோன்னதம் ஆகியவற்றின் அடையாளங்களினாலும் உமது திருநாமங்கள் எனும் கடலிலிருந்து அவர்களின் பெயர்களை அனுப்பி வைத்துள்ளீர்; அத்துடன் உமது அன்பெனும் பொருளினால் அவர்களின் உள் சாராம்சங்களையும், உமது சமயத்தின் உந்து சக்தியினால் அவர்களின் அதி உள்ளார்ந்த நிலைகளையும் படைத்துள்ளீர். பிரிவே தொடரா மீண்டும் ஒன்றிணைதல், தூரமறியா அண்மைய, முடிவே அறியா நித்தியம் ஆகியவை அவர்களுடையதே. மெய்யாகவே, இவர்கள் என்றும் உம்மை நினைவு கூர்ந்திடுவோரும், எக் காலமும் உம்மைச் சுற்றி வலம் வருபவர்களும், உமது முன்னிலை எனும் புகலிடத்தையும் உம்முடன் மீண்டும் ஒன்றிணைதல் எனும் கா’ஆபாவையும் வலம் வந்திடும் ஊழியருமாவர். என் இறைவா, அவர்கள் உமது வதனத்தின் ஒளிகளைக் கண்ணுறுகையில், தங்கள் முகங்களை உமது திசையில் வைத்து, உமது மகத்துவத்திற்கு அடிபணிந்து, உம்மைத் தவிர மற்றதனைத்திலிருந்தும் பற்றறுத்த நிலையில் உமது அழகின் முன் சாஷ்டாங்கமாய் வீழ்ந்து வணங்கியதைத் தவிர, நீர், அவர்களுக்கும் உமக்குமிடையே வேறெந்த வேறுபாட்டையும் நியமித்ததில்லை.

என் பிரபுவே, உமது தெளிவாய்த் துலங்கிடும் நூலில் நீர் வெளிப்படுத்தியுள்ளவற்றிற்கு ஏற்ப உமது கட்டளை, ஆணை ஆகியவற்றிற்கிணங்க நாங்கள் உண்ணா நோன்பிருந்துள்ளோம். இந் நாள் ஒரு முடிவிற்கு வந்து, நோன்பைத் துறக்கும் வேளை வரும் வரையில் எங்களின் ஆன்மாக்களை உணர்ச்சிகளிலிருந்தும், நீர் வெறுப்பன-வற்றிலிருந்தும் தடுத்துள்ளோம். ஆகையால், ஆர்வமிகு அன்பர்கள் இதயங்களின் ஆவலானவரும், உணருந்திறன் பெற்றுள்ள ஆன்மாக்களின் நேசரும் ஆனவரே, உமக்காக ஏங்குவோர்் இதயங்களின் ஆனந்தப் பரவசமும் உம்மைத் தேடுவோரது ஆவலின் குறிக்கோளும் ஆனவரே, உமது அண்மை எனும் சூழலில் உமது முன்னிலை எனும் சுவர்க்கத்திலும் வானளாவப் பறந்து, உமது அன்பு, நல்விருப்பம் என்னும் பாதையில் நாங்கள் ஆற்றியவற்றை எங்களிடமிருந்து ஏற்றுக் கொள்ளுமாறு உம்மை மன்றாடிக் கேட்டுக்கொள்கின்றேன். ஆகவே, உமது ஒருமைத் தன்மையை ஏற்றுக்கொண்டவர்கள், உமது ஏகத்துவத்தை ஒப்புக்கொண்டவர்கள், உமது மாட்சிமையின் அடையாளங்கள் ஆகியவற்றின் முன்னிலையில் தங்களைத் தாழ்த்திக் கொண்டுள்ளவர்கள், உமது அருகில் தஞ்சம் புகுந்து உம்மில் புகலிடம் தேடியவர்கள், உம்மைச் சந்தித்து, உமது முன்னிலை எனும் அவையினை அடைந்திடும் ஆவலில் தங்களின் வாழ்க்கைகளை அர்ப்பணித்தவர்கள், உமது அன்பிற்காக இவ்வுலகையே தங்களின் பின்புறம் வீசி எறிந்து, உமது அண்மையை அடைந்திடும் ஆவலில் உம்மைத் தவிர மற்றெல்லா உறவுகளையும் துண்டித்துக் கொண்டவர்கள் ஆகியோரின் மத்தியில் எங்களின் பெயர்களை எழுதிடுவீராக. எவரின் இதயங்கள் உமது நாமத்தை உச்சரித்ததும் உமது அழகின்பாலுள்ள ஆர்வமிக்க ஆவலினால் உருகினவோ, எவரின் கண்களில் உம்மைக் காணவேண்டும், உமது அரசவையில் பிரவேசிக்க வேண்டும், என்ற பேராவலினால் கண்ணீர் பொங்கி வழிந்ததோ, அவர்கள்தாம் இவ்வூழியர்கள்.

இதுவே உமது ஒற்றுமைக்கும், ஒப்பற்ற நிலைக்கும் சாட்சியமளிக்கும் எனது நா; உமது தாரளத்தன்மை, எண்ணிறந்த கொடைகள் ஆகியவற்றின் ஆசனத்தைத் தரிசிக்கும் எனது கண், உமது அழைப்பையும் உமது வெளியிடுகையையும் செவிமடுக்கத் தயாராக இருக்கும் எனது செவி. ஏனெனில், என் இறைவா, உமது விருப்பம் எனும் திருவாயினின்று வந்திடும் வார்த்தைகள், என்றும் வற்றாதவையென நீர் விதித்துள்ளீர் என்பதிலும், உமது வார்த்தைகளையும், வசனங்களையும் செவிமடுப்பதற்குப் புனிதப்படுத்தப்பட்ட செவிகள் அளிக்கப்பட்டுள்ளோர், எல்லா நேரங்களிலும் செவிமடுத்துக் கொண்டுள்ளனர் என்பதிலும் நான் உறுதியடைந்துள்ளேன். மேலும், என் பிரபுவே, இவையே உமது சலுகை, மென்கருணை என்னும் சுவர்க்கத்தை நோக்கி உயர்த்தப்பட்டுள்ள எனது கரங்கள். அன்றியும் உம்மைத் தவிர்த்து தனக்கென வேறொருவரை அன்பராகவோ, உம்மையன்றி வேறொருவரை அருள் பொழிபவராகவோ, உம்மையல்லாது வேறொருவரை அரசனாகவோ, உமது கருணை எனும் நிழலின் கீழ் அல்லாது வேறோர் அடைக்கலத்தையோ, உமது விண்ணுலகிலும், உமது மண்ணுலகிலும் வாழும் அனைவருக்கும் நீர் திறந்துவிட்டுள்ள இந் நுழைவாயிலின் முன்னிலையைத் தவிர வேறொரு புகலிடம் எதையும் கொண்டிராத இவ்வேழையை நீர் திருப்பி அனுப்பிடுவீரா? உமது மகிமைமீது ஆணை, இல்லை! உமது இராஜ்யம் நீடிக்கும் காலம் வரை நீர் என்னைக் கடுந்துன்பங்களுக்கு உட்படுத்திடினும், உமதன்புக் கருணையில் கொண்டுள்ள உறுதியில் நான் தளராமல் இருப்பவனாவேன்; மேலும் உம்மைக் குறித்து யாரேனும் என்னிடம் வினவுவாராயின் எனதுடலின் ஒவ்வோர் அங்கமும்: “அவர் தமது செயல்களில் நேசிக்கப்படுபவரும், தனது ஆணைகளுக்குக் கீழ்ப்படியப்படுபவரும், தனது இயல்பில் கருணைமிக்கவரும், தனது படைப்பினங்களிடம் இரக்கமுடையவரும் ஆவார்!”, எனப் பிரகடனப்- படுத்திடும்!

உமக்காக ஏங்குவோர் இதயங்களினால் மிகவும் நேசிக்கப்படுபவரே, உமது வலிமையே எனக்குச் சாட்சியம் பகர்கின்றது, உமது நுழைவாயிலில் இருந்து என்னை நீர் திருப்பியனுப்பிடினும், உமது ஊழியர்களிடையே உள்ள கொடுங்கோலர்களின் வாள்களுக்கும், உமது படைப்பினங்களிடையே உள்ள இறைப்பற்றற்றோரின் அடிக்குங் கோல்களுக்கும் என்னைப் பலியாகக் கைவிட்ட போதும், உம்மைக் குறித்து யாரேனும் என்னிடம் வினவுவாராயின் எனதுடலின் ஒவ்வோர் உரோமமும்: “மெய்யாகவே, அனைத்து உலகங்களினால் மிகு நேசிக்கப் படுபவரும் அவரே; அதி வள்ளன்மை மிக்கவரும் அவரே; என்றும் நிலைத்திருப்பவரும் அவரே! தம்மிடமிருந்து என்னைத் தூர வைத்திடும் அதே வேளையில் அவர் என்னைத் தமதருகே ஈர்க்கின்றார்; அவரது முன்னிலையை அடைந்திட எனக்கு அனுமதி மறுக்கும் அதே வேளை எனக்கு அவர் தமது புகலிடத்தையும் அளிக்கின்றார். எவரைத் தவிர்த்து மற்றதனைத்திலிருந்தும் சுதந்திரம் அடைந்தேனோ, எவரைத் தவிர்த்து மற்றெல்லாவற்றிலிருந்தும் உயர்த்தப்பட்டேனோ, அவரை விஞ்சிய கருணையாளர் வேறெவரையும் நான் கண்டிலேன்”, எனப் பிரகடனப்படுத்தும்.

என் இறைவா, மண்ணுலக, விண்ணுலக இராஜ்யங்களிலிருந்து சுதந்திரமடையும் அளவு எவர் உம்மால் வளமாக்கப்பட்டுள்ளாரோ அவர் நலம் பெற்றவராவார். எவர் உமது செல்வம் என்னும் கயிற்றை இறுகப் பற்றி உமது வதனத்தின் முன் அடிபணிந்துள்ளாரோ அவரே தனவந்தராவார்; அனைத்திற்கும் மேலாக அவருக்கு நீரே போதுமானவர். எவர் உம்மைத் தவிர்த்து, உமக்குமுன் செருக்குக் காட்டி உமது முன்னிலையை விட்டு விலகி, உமது அடையாளங்கள் மீது நம்பிக்கையற்று இருக்கின்றாரோ, அவரே வறியவராவார். என் இறைவனும், என் நேசருமானவரே, அகந்தை, தீவிர உணர்ச்சியெனும் காற்று அதன் விருப்பத்திற்கிணங்க இயக்கிடவும், வழிகாட்டிடவும் செய்திடுவோருடன் அல்லாது உமது சித்தம் என்னும் மென்காற்று, தன் விருப்பத்திற்கிணங்க இயக்கிடுவோரின் எண்ணிக்கையில் என்னையும் சேர்த்திடுவீராக. எல்லாம் வல்ல, மேன்மைமிகு, அதி வள்ளன்மை மிக்க இறைவன் உம்மையன்றி வேறிலர் .

என் இறைவா, நீர், உமது திருநாமத்துடன் தொடர்புப் படுத்தியுள்ள ‘அலா (உயர்வு) எனும் இவ்வதி மேன்மைமிகு மாதத்தில் உண்ணா நோன்பிருக்க, எனக்கு அருள் கூர்ந்து உதவியமைக்காக, ஒளியெல்லாம் உமக்கே உரியதாகட்டும். இம்மாதத்தில் உண்ணா நோன்பிருந்து, அதன்வழி உமது அண்மையை அடைந்திட வேண்டுமென, நீர் உமது ஊழியர்களுக்கும், உமது மக்களுக்கும் பணித்துள்ளீர். எவ்வாறு முதல் மாதம் பஹா என்னும் உமது திருநாமத்துடன் தொடங்கியதோ அதே போன்று வருடத்தின் நாள்களும் மாதங்களும் உண்ணா நோன்புடன் உச்ச நிலையை அடைந்தன, அதனால் நீரே முதலும் இறுதியுமானவர், வெளிப்படுத்தப்பட்டவரும், மறைந்துள்ள-வருமென சாட்சியமளித்து, உமது சமயத்தின் மகிமை வாயிலாக மட்டுமே, எல்லா நாமங்களின் மகிமையும் அருளப்படுகின்றது எனவும், உமது திருமொழி, உமது விருப்பம் ஆகியவையின் மூலமாகவே பொருளுரைக்கப்பட்டு, உமது நோக்கத்தின் மூலமாகவே வெளிப்படுத்தப்படவும் கூடும் என அனைவரும் ஐயத்திற்கிடமின்றி உறுதியளிக்கப்படுவர். இம்மாதத்தினை உம்மிடமிருந்து வரும் ஒரு நினைவுகூறலாகவும் கௌரவமுமாகவும் அவர்களிடையே உமது பிரசன்னத்தின் அடையாளமாகவும் இருக்குமாறு விதித்துள்ளீர். இம்மாதத்தினை அவர்கள் மத்தியில் உமது நினைவாகவும், உமது கௌரவமாகவும், அவர்களிடையே உமது இருத்தலின் அடையாள-மாகவும் நியமித்துள்ளீர், அதனால் அவர்கள் உமது மகோன்னதம், உமது மாட்சிமை, உமது இறைமை, உமது மகிமை ஆகியவற்றை மறக்காதிருக்கவும், நினைவுக்கெட்டாத காலந்தொட்டுப் படைப்பு முழுமைக்கும் நீரே ஆட்சியாளராக இருந்து வந்துள்ளீர், இனியும் இருந்து வருவீர் என அவர்கள் நன்கு உறுதியடைந்திடவும் கூடும். விண்ணுலகிலும், மண்ணுலகிலும் படைக்கப்-பட்டுள்ள எதுவுமே உமது ஆளுகையைத் தடை செய்யவோ, வெளிப்பாடு, படைப்பு என்னும் இராஜ்யங்களிலுள்ள எவருமே நீர் உமது நோக்கத்தை நிறைவேற்றுவதைத் தடுத்திடவோ இயலாது.

என் இறைவா, உமது தவறா தற்காப்பின் வழி பாதுகாக்கப்பட்டு உமது அதி விழுமிய கருணையின் நிழலின் கீழ் அடைக்கலம் அளிக்கப்பட்டோரைத் தவிர, பூவுலகின் மனித இனம் அனைத்தையும் புலம்பச் செய்த உமது நாமத்தின் பேரால், உமது ஊழியர்கள் உமக்கெதிராக எழுந்த போதினும், உமது மக்கள் உம்மை விட்டு அப்பால் திரும்பியும், உமது நாமத்தை உச்சரிக்கவோ, உந்தன்பாலான தொடர்புறவு எனும் புகலிடத்தின்பாலும், உமது புனிதம் எனும் கா’ஆபாவின்பாலும் தனது முகத்தைத் திருப்பவோ, எவருமே இல்லாது போயினும், நான் ஒருவனாகவும், தனியனாகவும் முன்னெழுந்து, உமது சமயத்தை வெற்றி பெறச் செய்யவும், உமது திருமொழியினை மேன்மைப்படுத்தவும், உமது இறைமையைப் பிரகடனப்படுத்தவும், உமது மாண்புமிகு தன்னகத் தன்மையின் புகழ்ச்சியினைக் கொண்டாடவும், உமது சமயத்தில் எங்களை உறுதிப்படுத்தவும், உமதன்பில் பற்றுறுதியுடன் இருக்கவும், செய்திடுமாறு, உம்மை மன்றாடிக் கேட்கின்றேன். மேலும் என் பிரபுவே, போற்றுதற்குரிய நாமம் என்று ஒன்றை நான் கருதும் போதெல்லாம் இதனை நான் உம்முடனேயே தொடர்புப்படுத்தியுள்ளதால், எந்த நாமத்தைக் கொண்டு உம்மை நான் போற்றிப் புகழ முயன்றிடினும், நான் குழப்பமே அடைந்துள்ளேன். ஏனெனில், உமது புனித முன்னிலையில், உம்மை வழிபட உம்முடன் நான் தொடர்புப்படுத்தும் உமது அனைத்து மேன்மைமிக்கப் பண்புகளும், உமது அனைத்து அதி சிறந்த நாமங்களும், எனது சுய புரிந்துகொள்ளலின் அளவினையே காட்டுவ-தல்லாது, வேறொன்றுமில்லை என்பதனை நான் முழுமையாக உணர்ந்துள்ளேன். உம்மைத் தவிர வேறெவரின் வருணனைக்கும், அறிவுக்கும் மேலாகவே உமது மெய்ம்மை நிலை அளவிறந்த மேன்மைக்குரியதாகும்; மேலும் உம்மை அடைவதற்கான அவர்களின் முயற்சிகளிலான உமது படைப்பினங்களின் போற்றதலுக்கும் உமது ஊழியர்களின் புகழ்ச்சிக்கும் அப்பால் நீர் புனிதமானவராகவே இருக்கின்றீர். உமது ஊழியர்களிடமிருந்து தோன்றும் எதுவுமே அவர்களின் சொந்த குறை வரம்புகளுக்கு உட்பட்டவையும், அவர்களின் வீண் எண்ணங்கள், கற்பனைகள் ஆகியவற்றிலிருந்து உருவாக்கப்-பட்டவையுமாகும்.

அந்தோ! அந்தோ! என் நேசரே, உம்மைத் தகுந்த முறையில் புகழ்வதற்கான எனது இயலாமைக்-காகவும், உமது நாள்களில் எனது குறைபாடுகளுக்காகவும், நான் வருந்துகின்றேன்! என் இறைவா, நான் உம்மை, எல்லாம் அறிந்தவர் என அறிவித்தேனாகில், உமது விருப்பம் என்னும் ஒரே விரலினால் வாய் பேசாத பாறை ஒன்றினைச் சுட்டி, அதற்கு நீர் கடந்த கால, வருங்கால அறிவனைத்தையும் வெளிப்படுத்திடும் சக்தியை அளித்திடுவீர் என்பதையும், மேலும் உம்மை சர்வ சக்தி வாய்ந்தவர் என நான் புகழ்வேனாகில், விண்ணுலகங்களையும் மண்ணுலகையும் அதிரவைக்கும் அளவிற்கு உமது நோக்கம் என்னும் திருவாயிலிருந்து வெளிப்பட்டிடும் ஒரே வார்த்தை அதற்குப் போதுமானதென்பதையும் நான் தயக்கமின்றி உணர்கின்றேன்.

உம்மை அறிந்து கொண்டோர் அனைவரின் நேசரே, உமது மகிமையே எனக்குச் சாட்சியம் அளிக்கின்றது; உமது அறிவெனும் வெளிப்பாடுகள் முன்னால், கற்றவர் ஒருவர் தனது அறியாமையை ஒப்புக்கொள்ள மறுப்பாராகில், அவர் உமது மக்களிலேயே அதி அறிவிலி எனக் கணித்திடப்படுவார்; மேலும், உமது சக்தியின் ஆதாரங்கள்் முன், சக்திமிக்க ஒருவர், தனது பலவீனத்தை ஒப்புக்கொள்ள மறுப்பாராகில், அவர் உமது படைப்பினங்களிலேயே, அதி பலவீனராகவும், அதி கவனமற்றவராகவும் கருதப்படுவார். இது இவ்வாறானதுதான் என்பது எனது அறிவுக்கும், உறுதிப்பாட்டிற்கும் தெளிவாய் இருக்கையில், நான் எங்ஙனம் உம்மை மேன்மைப்படுத்தவோ, வருணிக்கவோ, புகழவோ இயலும்? ஆதலின் நான், எனது பலவீனத்தை உணர்ந்து, உமது வலிமையெனும் பாதுகாப்பை நோக்கி விரைந்துள்ளேன்; எனது ஏழ்மையை உணர்ந்து, உமது செல்வம் எனும் நிழலின் கீழ் அடைக்கலம் நாடியுள்ளேன்; மேலும் எனது சக்தியின்மையை உணர்ந்து, உமது சக்தி, வலிமை எனும் திருக்கூடாரத்தின் முன் நிற்பதற்கு முன்னெழுந்துள்ளேன். உம்மையன்றி வேறு ஆதரவளிப்பவர் எவரையும் நாடாத இவ்வேழையை நீர் ஒதுக்கித் தள்ளவோ, உம்மையன்றி வேறு எவரையும் தனது உண்மை நேசராகக் கொண்டிடாத இவ்வந்நியனைத் திருப்பி அனுப்பிடவோ செய்திடுவீரா?

பிரபுவே, என்னுள்ளிருக்கும் அனைத்தையும் நீர் அறிவீர், ஆனால், உம்முள் இருப்பது யாதென யான் அறியேன். உமது அன்பான அருள்பாலிப்பின் வழி என்மீது இரக்கம் காட்டி உமது நாள்களில் என் இதயத்திற்கு அமைதியளிக்கக் கூடியதனைக் கொண்டு எனக்குத் தெய்வீக ஊக்கம் அளித்து, உமது புனித முன்னிலையின் வெளிப்பாடுகள் வழி எனதான்மாவுக்குச் சாந்தியளிப்பீராக. பிரபுவே, உமது வதனத்தின் ஒளிகளின் பிரகாசங்களினால், படைப்புப் பொருள்கள் அனைத்தும் ஒளிரச் செய்யப்பட்டு, உமது வெளிப்படுத்துதலை, உமது ஊழியர்களிடையே ஆழ்ந்து உறங்கிக் கொண் டிருப்பவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கும் அவ் வெளிப்படுத்துதலைத் தவிர, யாம் வேறெதனையும் அதனுள் கண்டிராத வகையில், உமது ஒப்பற்ற வெளிப்படுத்துதல்களின் மாட்சிமை காரணமாக மண்ணுலக விண்ணுலகவாசிகள் சுடரொளி விட்டுப் பிரகாசிக்கின்றனர்.

என் பிரபுவே, படைப்புலக இராஜ்யங்கள், அவை கண்களுக்குப் புலப்படுபவையோ புலப்- படாதவையோ, அவை அனைத்தையும் சூழ்ந்துள்ள உமது அருளை எனக்குக் கிட்டாது செய்திடாதீர். என் இறைவா, மனுக்குலம் முழுமையும் மீண்டும் திரும்பி, உமதருகினை அடையும்படி அழைப்பு விடுத்து, உமது கயிற்றினைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்ளவும் தூண்டிய பிறகும் நீர் வெகு தூரம் விலகி இருக்கலாமா? என் நேசரே, உமது மாசுபடுத்தவியலாத திருநூலிலும், உமது அற்புத வசனங்களிலும், உமக்காக ஏங்குவோர் அனைவரையும் உமது அருட்பேறு எனும் அரங்கத்திலும், உமக்காக ஆவலுறுவோரை உமது வள்ளன்மைமிகு தயையெனும் நிழலின் கீழும், உம்மைத் தேடுவோரை உமது இரக்கம், அன்புக்கருணை என்னும் விதானத்தின் கீழும் ஒன்று திரட்டுவேன் என நீர் வாக்களித்திருந்தும் என்னை மட்டும் ஒதுக்கித் தள்ளிடுவீரா?

என் இறைவா, உமது சக்தி மீது ஆணை, என் புலம்பல்கள் என்னுள், இதயத்தையே நிறுத்தி விட்டுள்ளன, அதன் வேதனைக் குரல்கள் என் கைகளிலிருந்து கடிவாளத்தினைப் பற்றிக் கொண்டுள்ளன! எப்பொழுதெல்லாம் நான் என்னை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டு, உமது கருணையெனும் அற்புதங்களையும், உமது தயைமிகு அருள்பாலிப்பு எனும் அடையாளங்-களையும், உமது தாராளத் தன்மையின் ஆதாரங்களையும் கொண்டு, எனது ஆன்மாவை மகிழ்வுறச் செய்கின்றேனோ, அப்பொழுதெல்லாம் நான் உமது நீதியின் வெளிப்பாடு முன்னும், உமது வெஞ்சினம் என்னும் அடையாளங்கள் முன்னும் நடுக்கமுறுகின்றேன். நீர் இவ்விரு நாமங்களினால் அறியப்பட்டு, இவ்விரு குணவியல்புகளினால் வருணிக்கவும் பட்டுள்ளீர் என்பதை நான் அறிவேன்; எனினும் என்றும் மன்னிப்பவர் எனும் உமது நாமத்தினால் வணங்கி வேண்டப்படுகிறீரோ வெஞ்சினமிக்கவர் எனும் உமது நாமத்தினால் வேண்டப்படுகிறீரோ என்பதைக் குறித்து, நீர் அக்கறை கொள்வதில்லை. உமது மகிமை சாட்சியாக, அனைத்திலும் உமது இரக்கமே விஞ்சி நிற்கின்றது என்பதை நான் அறிந்திலனாகில் எனதுடலின் அங்கங்கள் இலதாகி விட்டிருக்கும், எனது மெய்ம்மை அணைக்கப்பட்டு, எனது உள்ளுருவும் நிர்மூலமாக்கப்பட்டிருக்கும். ஆனால், பொருள்கள் அனைத்தையும் உமது அருள் சூழ்ந்துள்ளதையும், படைப்பு முழுமையையும் உமது கருணை அரவணைத்துள்ளதையும் நான் கண்ணுறும்போது, எனதான்மாவும் எனது அதி உள்ளார்ந்த உருவும் நன்கு உறுதியடைகின்றன.

அந்தோ, அந்தோ! என் இறைவா, உமது நாள்களில் என்னிடமிருந்து நழுவிச் சென்றிட்டவை குறித்து நான் வருந்துகின்றேன்; மேலும், அந்தோ, அந்தோ, எனது இதயத்தின் ஆவலே, உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும், உமது நம்பிக்கைக்-குரியவர்களும் கண்ணுற்றிராத இவை போன்ற நாள்களில் உமக்குரிய சேவையிலும், கீழ்ப்படிதலிலும் நான் செய்யாமல் விட்டுச் சென்றவைக்காகவும் வருந்துகின்றேன்! என் கடவுளே, உமது தன்னகத்தினாலும் உமது கருணை எனும் அரியணை மீது அமர்ந்துள்ள உமது சமயத்தின் அவதாரத்தினாலும் என்னை உமது சேவையிலும் நல்விருப்பத்திலும் உறுதிப்படுத்துமாறு வேண்டிக் கொள்கின்றேன். உம்மிடமிருந்து அப்பால் திரும்பியும், உமது வாசகங்களை நம்பாதவர்களிடமிருந்தும், உமது உண்மையை மறுத்து, உமது சான்றுகளை ஏற்க மறுத்தோரிடமிருந்தும், உமது ஒப்பந்தத்தையும் இறுதி விருப்ப சாஸனத்தையும் மீறியோரிடமிருந்தும் என்னைப் பாதுகாப்பீராக.

பிரபுவே, எனதாண்டவரே, உமது சாராம்சத்தின் அவதாரம், உமது ஒருமைத் தன்மையின் பகலூற்று, உமது அறிவின் சுரங்கம், உமது வெளிப்பாட்டின் தோற்றிடம், உமது அருட்தூண்டலின் களஞ்சியமும் உமது இறைமையின் அரியாசனம், உமது தெய்வத்தன்மையின் உதயஸ்தலம், மூலாதார மையம், அதி உயரிய வதனம், ஆதி வேர், தேசங்களை உயிர்ப்பிப்பவர், ஆகிய அவருக்கே போற்றுதல் எல்லாம் உரியதாகட்டும்; மேலும் அவரிலும், அவரது வசனங்களிலும், நம்பிக்கை வைப்பதில் முதன்மையானவரும், எவரை நீர் உமது அதி விழுமிய திருவாக்கின் மேம்பாட்டிற்கான அரியணையாகவும், உமது அதி மேன்மையான நாமங்களின் குவிமையக் குறியாகவும், உமது அருள்பாலிப்பு என்னும் கதிரவனின் பிரகாசமெனும் பகலூற்றாகவும், உமது நாமங்கள், இயல்புகள் ஆகியவற்றின் தோற்றத்திற்கான உதய ஸ்தலமாகவும், உமது விவேகம், உமது திருக் கட்டளைகள் எனும் முத்துக்களின் கருவூலமாகவும் ஆக்கியுள்ளீரோ, அவர் மகிமையுறுவாராக. அவர்பால் இறுதியாக வந்தவரான இவர், எல்லா நன்மதிப்புக்கும் உரியவர் ஆவாராக; அவரது வதனத்தின் ஒளிகளினால் ஒளிரப்பட்டு, அவர் முன்னால் இவரே சாஷ்டாங்கமாய் வீழ்ந்து, அவர்பால் இவரது கீழ்ப்படிதலுக்குச் சாட்சியங் கூறியதைத் தவிர, இவரது வருகை அவரது வருகை போன்றே இருந்தது. இவர் மீதான உமது வெளிப்பாடும் அவர்மீதான உமது வெளிப்பாட்டைப் போன்றே இருந்தது. அவரது பாதையில் உயிர்த் தியாகம் செய்தோர் மீதும், அவரது அழகின் மீது கொண்ட அன்பின் பொருட்டுத் தங்களின் வாழ்க்கைகளை அர்ப்பணித்தோர் மீதும் புகழொளி சேரட்டுமாக.

என் இறைவா, இவர்களே உம்மிலும் உமது அடையாளங்களிலும் நம்பிக்கை வைத்துள்ள ஊழியர்கள் என்பதற்கும் உமது முன்னிலை எனும் புகலிடத்தை நாடி, உமது வதனத்தை நோக்கித் திரும்பியுள்ளோர் என்பதற்கும், உமது அண்மைய எனும் அரசவையினை நோக்கித் தங்கள் முகங்களைத் திருப்பி, உமது நல்விருப்பம் எனும் பாதையில் நடந்துள்ளோர் என்பதற்கும் உமது விருப்பத்திற்கேற்ப உம்மை வழிபட்டு, உம்மைத் தவிர மற்றெல்லாவற்றிலிருந்தும் தங்களைப் பற்றறுக்கச் செய்து கொண்டோர் என்பதற்கும், நாங்கள் சாட்சியமளிக்கின்றோம். பிரபுவே, எல்லா வேளைகளிலும் அவர்களின் ஆவிகள், உடல்கள் ஆகியவற்றிற்குச் சகலத்தையும் சூழவல்ல உமது கருணையின் அற்புதங்களிலிருந்து ஒரு பங்கினை வழங்கிடுவீராக. எவரது உதவி மனிதர் அனைவராலும் வேண்டப்படுகின்றதோ அவரைத் தவிர, எல்லாம் வல்லவரும், சர்வ மகிமையும் வாய்ந்த இறைவன், உம்மையன்றி வேறிலர்.

பிரபுவே, அவர் பெயராலும், அவர்கள் பெயராலும், மேலும் நீர் யாரை உமது சமயமெனும் அரியணையில் அமர்த்தி மண்ணுலக விண்ணுலக வாசிகள் அனைவரையும் புகலிடம் பெறச் செய்தீரோ அவர் பெயராலும், எங்களை, எங்களின் அத்துமீறல்களிலிருந்து தூய்மைப்படுத்துமாறும், உமது முன்னிலையில் உண்மையெனும் இருக்கையினை எங்களுக்காக அருளுமாறும், இவ்வுலகின் துன்பங்களும், அதன் துரதிர்ஷ்டங்களும், உம்மை நோக்கித் திரும்புவதிலிருந்து தடுக்கப்படாதாருடன் நாங்கள் தொடர்புறவுக் கொண்டிடச் செய்திடுமாறும் உம்மைக் கெஞ்சிக் கேட்கின்றேன். மெய்யாகவே, நீரே சர்வ சக்திவாய்ந்தவர், அதி மேன்மை மிக்கவர், பாதுகாப்பாளர், என்றும் மன்னிப்பவர், அதி கருணையாளர்.

முல்லா ஹுசேன்

குடூஸ்

பாப் பெருமானார்

 


English  
ភាសាខ្មែរ  
አማርኛ.  
Afrikaans  
Alaska Native  
American Indian  
Azərbaycan  
Bahasa Indonesia  
Bahasa Malaysia  
Bidayuh  
Bosanski  
Canadian Indigenous  
Català  
Cebuano  
Česky  
Chamorro  
Chichewa  
Corsica  
Cymraeg  
Daga  
Dansk  
Deutsch  
Dzongkha  
Eesti  
Español  
Esperanto  
Euskara  
Fiji  
Filipino  
Føroyar  
Français  
Frysk  
Hausa  
Hawaiian  
Hiri Motu  
Hrvatski  
Irish  
Íslenska  
Italiano  
Kabyle  
Kalaallisut  
Kiribati  
Kiswahili  
Kreyol Ayisyen  
Kuanua  
Kube  
Latviešu  
Lëtzebuergesch  
Lietuvių  
Luganda  
Magyar  
Malagasy  
Malti  
Māori  
Marshallese  
Melpa  
Montenegrin  
Nalik  
Namibia  
Nederlands  
Norsk  
Papiamentu  
Polski  
Português (BR)  
România  
Sámi  
Samoan  
Sarawak  
Sesotho  
Shqip  
Slovenščina  
Slovensky  
Sranan Tongo  
Srpski српски  
Suomi  
Svenska  
Tetum  
Tiếng Việt  
Tok Pisin  
Tongan  
Türkçe  
Türkmençe  
Tuvalu  
Vanuatu  
ελληνικά  
Беларускі  
български  
Кыргыз  
Монгол хэл  
Русский  
Тоҷикӣ  
Україна  
հայերեն  
اُردُو  
العربية  
فارسی  
नेपाली  
मराठी  
हिंदी  
বাংলা  
ગુજરાતી  
ଓଡ଼ିଆ  
தமிழ்  
తెలుగు  
ಕನ್ನಡ  
മലയാളം  
ภาษาไทย  
ພາສາລາວ  
한국어  
日本語  
简体中文  
繁體中文  
Windows / Mac