Return to BahaiPrayers.net
Facebook
“தெய்வீக மாலுமியின் நிருபத்தினைக் கருத்தூன்றிப் படியுங்கள்; அதனால், நீங்கள், உண்மையை அறிந்துகொள்ளக் கூடும்; மேலும், ஆசீர்வதிக்கப்பெற்ற அழகரானவர் நிகழவிருப்பவற்றை முழுதும் முன்னறிவித்துள்ளார் என்பதைக் கவனமாக எண்ணிப் பார்க்கவும் இயலும். புரிந்து கொள்வோர் எச்சரிக்கையாக இருக்கட்டும்!”
— அப்துல்-பஹா
அவரே கருணையாளரும் நல்லன்பு மிக்கவரும் ஆவார்!
தெய்வீக மாலுமியே! நித்தியம் என்னும் உமது மரக்கலத்தைத், தெய்வீக வான்்படையினருக்கு முன்னால், தோன்றிடச் செய்வீராக;
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
அவ்வதிவியப்புக்குரியவர் பெயரில், அதனைத், தொன்மை வாய்ந்தக் கடலின் மீது, பயணத்தைத் தொடங்கச் செய்வீராக.
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப்படுத்தப் படுவாராக!
அதி மேன்மைமிகு இறைவன் பெயரால், புனித ஆவியானோரை, அதனுள் நுழைய விடுவீராக.
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
ஆகவே, நங்கூரக் கயிற்றினை அவிழ்த்து விடுவீராக; அதன்வழி, அது, ஒளி என்னும் சமுத்திரத்தினில் தன் கடற்பயணத்தைத் தொடங்கக் கூடும்.
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
அதனால், ஒரு வேளை, அதனில் வசிப்போர், நிரந்தர உலகில், அணிமை எனும் ஓய்விடங்களை சென்றடையக் கூடும்.
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
புனிதமிகு செங்கடற்கரையினைச் சென்றடைந்த பின்,
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
அவர்களை வெளிவரச் செய்வீராக; அதன்வழி, அவர்கள், புலன்கடந்ததும் காணவியலாததுமான நிலையை அடைந்திடக் கூடும்;
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
அந்நிலையில் பிரபுவானவர், அவர்தம் சுடரொளியின் பேரழகினில், அழிவற்ற விருட்சத்தினுள், தோற்றமளித்திட்டார்.
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
அதனில், அவரது சமயத்தின் திருவுருவானோர், தங்களைத், தானெனுந் தன்மையிலிருந்தும், உணர்ச்சிகளில் இருந்தும் தூய்மைப் படுத்திக்கொண்டனர்;
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
எதனைச் சுற்றி மோஸஸின் பேரழகு என்னும் நிலையான சைனியம் வலம் வருகின்றதோ ;
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
அதனில் இறைவனின் திருக்கரம் மாட்சிமைமிகு நெஞ்சத்தினின்று வெளிக் கொணரப் பட்டது;
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
சமயத்தின் மரக்கலத்தில் வசிப்போருக்கு எல்லாத் தெய்வீகத் தன்மைகளும் பிரகடனஞ் செய்யப்பட்டிருந்த போதிலும், அது அசைவில்லாமலேயே இருக்கின்றது.
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
மாலுமியே! யாம் மர்மத் திரைக்குப் பின்னால் உமக்குப் போதித்தவற்றை மரக்கலத்தினில் இருப்போருக்கும் போதிப்பீராக.
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
ஒரு வேளை, அவர்கள், புனித வெண்பனித் தளத்தினில் தங்காதிருக்கக் கூடும்;
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
ஆனால், ஒரு வேளை, பிரபுவானவர், ஆவியின் இறக்கை மீது பறந்தெழுந்து, கீழுலகத்தில், போற்றுதலுக்கெல்லாம் மேலாக பெருமைப்-படுத்தியுள்ள ஸ்தானத்தை அடையக் கூடும்;
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
பரந்த வெளியிலெல்லாம் பறந்து மீண்டும் ஒன்றிணைதல் என்னும் தனிச்சலுகை பெற்ற பறவைகளைப் போல்,
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
ஒளி என்னும் கடல்களில் மறைந்திருக்கும் மர்மங்களை அறிந்திடக் கூடும்.
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
அவர்கள் உலகக் கட்டுப்பாடுகளின் வரம்புகளைக் கடந்து சென்று, அத் தெய்வீக வழிகாட்டுதல் என்னும் மையத்தை அடைந்தனர்.
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
பிரபுவானவர் அவர்களுக்கென விதித்துள்ள ஸ்தானங்களுக்கும் மேலான நிலைக்குத் தங்களை உயர்த்திக்கொள்ள ஆவல் கொண்டுள்ளனர்.
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
அதன் விளைவாக, எரியும் நட்சத்திரம், அவரது முன்னிலை என்னும் இராஜ்யத்தில் உறைவோரை வீசியெறிந்து விட்டது;
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
அவர்கள் கண்களுக்குப் புலப்படாத காட்சி மேடையில் எழுப்பப்பட்டக் கம்பீரமானக் குரலைப் பின்னாலிருந்து கேட்டனர்;
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
பாதுகாக்கும் தேவதைகளே! கீழுலகத்திலுள்ள அவர்களின் இருப்பிடத்திற்கே அவர்களைத் திருப்பி அனுப்பிடுங்கள்;
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
ஏனெனில், விண்ணுலகப் புறாவின் சிறகுகளே அடைந்திராத அக்கோளத்திற்கே உயர்ந்திட அவர்கள் உளங் கொண்டுள்ளனர்;
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
அதனால், கற்பனை என்னும் கப்பல் அசைவற்று நிற்கின்றது; அதனைச் சிந்திப்போரின் உள்ளங்களால் அதனைப் புரிந்துகொள்ள இயலாது.”
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
அதன் பேரில், விண்ணுலக் கன்னி தனது மேன்மை மிகு மண்டபத்திலிருந்து அதனைக் கண்ணுற்றாள்;
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
தனது புருவத்தினால் விண்ணுலகக் கூட்டத்தைக் காட்டிச் சைகை செய்திட்டாள்;
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
தனது வதனத்தின் பிரகாசத்தினைக் கொண்டு விண்ணுலகையும் மண்ணுலகையும் ஒளியில் மூழ்கச் செய்திட்டாள்;
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
அவளது அழகு மண்ணாலான மக்களின் மீது பிரகாசித்திட்டபோது,
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
உயிரினங்கள் அனைத்தும் மடிந்திடு-வோருக்குள்ள சவக்குழியில் ஆட்டங் கண்டன.
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
அவள், நித்திய காலமும் காதே கேட்டிறியாத குரலில் ஒலி எழுப்பினாள்;
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
“பிரபுவானவர் சாட்சியாக! எவரது உள்ளம் மதிப்பு மிக்கவரும் ஒளிமயமானவருமாகிய அராபிய இளைஞரின் அன்பின் நறுமணத்தினைக் கொண்டிருக்க வில்லையோ,
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
அவர், அதிவுயர் விண்ணுலகின் ஒளியை நோக்கி உயர்ந்திடவே இயலாது.”
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
அதன் விளைவாக அவள் தனது தோழிகளிடையே ஒருத்தியை தன்பால் அழைத்து,
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
“நித்தியம் என்னும் மாளிகைகளில் இருந்து பரந்த வெளியில் இறங்கி,
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
அவர்கள் தங்கள் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைத்துள்ளதன்பால் திரும்பிடுவாயாக.
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
“தீயோனின் கைகள் ஆற்றியுள்ள கொடூரச் செயல்களின் காரணமாக, ஒளியெனும் கூடாரத்தினுள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞனது மேலங்கியின் நறுமணத்தினை முகர்ந்திடுவீராயின்,
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
நீர் மனதுக்குள்ளேயே குரல் எழுப்புவீராக, அதனால், நித்திய செல்வத்தினைக் கொண்டிருப்போர், விண்ணுலகின் அறைகளுள் வாழ்வோர், அனைவரும் புரிந்துகொள்ளவும் செவிமடுக்கவும் செய்திடுவர்;
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
அதனால் அவர்கள் அனைவரும் தங்களின் நித்திய அறைகளிலிருந்து கீழிறங்கி வந்து நடுக்கமுற்றிடுவர்;
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
உமது பற்றுறுதி என்னும் உச்சத்திலிருந்து இறங்கி வந்ததற்காக அவர்களின் கைகளையும் கால்களையும் முத்தமிடுவர்;
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
அதனால், ஒரு வேளை, அவர்கள் அங்கிகளிலிருந்து அன்புக்குப் பாத்திரமானோரின் நறுமணத்தினைக் கண்டிடக் கூடும்.”
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
அதன் விளைவாக, அன்புக்குரிய கன்னியின் வதனம் தெய்வீக அறைக்கு மேல், இளைஞனின் இறவா உடலுக்குமேல், பிரகாசிக்கும் ஒளியைப் போல் பளிச்சிட்டது.
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
பிறகு, அவள், விண்ணுலகையும் அதனுள் இருக்கும் அனைத்தையும் அந்தளவு ஒளிபெறச் செய்திடும் ஆடையில் கீழிறங்கி வந்தாள்.
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
அவள், தன்னையே எழுச்சியூட்டிக் கொண்டு, அனைத்தையும் புனிதமிக்கப் பிரதேசங்களிலும் நேர்த்திமிகுப் பகுதிகளிலும் நறுமணம் கமழச் செய்திட்டாள்.
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
அவ்விடத்தை அடைந்ததும், அவள், படைப்பின் அதி மையத்தில் அதிவுயரிய நிலைக்கு எழுந்திட்டாள்;
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
ஆதி அந்தமே அறிந்திராத நேரத்தில் அவற்றின் நறுமணத்தினை நுகர்ந்திட முயன்றிட்டாள்.
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
அவற்றுள், தான் விரும்பியதைக் கண்டிடவில்லை; மெய்யாகவே, இதுவே, அவரது அற்புதமான கதைகளில் ஒன்றாகும்.
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
அவள் கூக்குரலிட்டுக் கதறி அழுதாள்; புலம்பினாள்; தனது மேன்மைமிகு உயரிய மாளிகைக்குள் இருக்கும் தனது ஸ்தானத்திற்கே திரும்பிச் சென்றாள்;
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
அதற்குப் பின் மர்மமான வார்த்தை ஒன்றை உச்சரித்திட்டாள்; தனது தேன் வடியும் நாவினால் காதோடு காதாகக் கூறினாள்;
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
தெய்வீக வான்படையினரின் முன்பாகவும் விண்ணுலகின் இறப்பற்றக் கன்னியரின் முன்பாகவும், அழைப்பு விடுத்திட்டாள்;
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
பிரபுவின் மீது ஆணை! உரிமை கோரிடும் இவ்வீணர்களிடம் இருந்து யான் பற்றுறுதி என்னும் மென்காற்றினைக் கண்டிலேன்!
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
பிரபுவின் மீது ஆணை! இளைஞர், தனிமையானவராகவும் கைவிடப்பட்டவராகவும் நாடுகடத்தப்பட்ட தேசத்தில், இறைப்பற்றற்றோரின் கைகளில் அடைப்பட்டுக் கிடந்தார்.”
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
பிறகு, அவள், தன் மனதுக்குள்ளேயே கதறினாள்; அதன் பேரில், தெய்வீக சைனியங்களெல்லாம் கதறி அழுதன;
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
அவள் மண் தரையில் வீழ்ந்து ஆவி துறந்திட்டாள். அவளுக்கு மேலுலகிலிருந்து அழைப்பு வந்து, அவளும் தன்னை அழைத்தோனுக்குச் செவிசாய்த்திட்டது போல் தோன்றுகின்றது.
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
தனது அதி மேன்மைமிகு விண்ணுலகின் மையத்திலிருந்து, பாசத்தின் சாரத்தினைக் கொண்டு அவளைப் படைத்தோன் உயர்வெய்துவாராக.
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
அதன் விளைவாக, விண்ணுலகக் கன்னிகள் தங்களின் அறைகளிலிருந்து வெளிவந்தனர்; அப்பொழுது அவர்களின் முகங்களில் காணப்பட்டதை அதி உயரிய சுவர்க்க வாசிகளின் எந்தக் கண்ணுமே கண்டதில்லை.
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
அவர்கள் அனைவரும் அவளைச் சுற்றி நின்றனர்; அந்தோ! அவளது உடல் மண் தரையில் வீழ்ந்து கிடப்பதைப் பார்த்தனர்.
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
அவளது நிலையைக் கண்ணுறும்போது, இளைஞரால் கூறப்பட்டக் கதையில் ஒரு வார்த்தையை, ஆழ்ந்து புரிந்து கொண்டனர்; தலைப்பாகைகளை அவிழ்த்திட்டனர்; உடையைக் கிழித்துக் கொண்டனர்; முகங்களில் அடித்துக் கொண்டனர்; தங்களின் மகிழ்ச்சியை மறந்தனர்; கண்ணீர் வடித்தனர்; தங்களின் கைகளினால் கன்னத்தில் அறைந்து கொண்டனர்: மெய்யாகவே, இதுவே மர்மமான, கொடூரம் மிகுந்த வேதனைகளில் ஒன்று —
பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!
- Bahá'u'lláh